அம்மாவின் தொடர்ச்சியாக ஆர்.சூடாமணி

அம்மாவின் தொடர்ச்சியாக ஆர்.சூடாமணி
Updated on
2 min read

எழுத்​தாளர் என்​ப​தை​யும் தாண்டி ஒரு மனுஷி​யாக என்னை பிரமிக்க வைத்​தவர் ஆர்.சூடாமணி. மிக​வும் பண்​பட்ட, பக்​கு​வ​மான பெண்​மணி​யாக அவர் இருந்​தார். “இப்​படி​தான் இருக்க வேண்​டும் என்​பதை உங்​களுக்கு உணர்த்​தி​யது யார்” என்று நான் ஒரு​முறை கேட்​ட​போது அவர் உச்​சரித்த பெயர் “அம்​மா”.

“அரக்கு கொட்​டடிப் புட​வை, முகத்​தில் வாடாத புன்​னகை, சிறியதும் சக்தி வாய்ந்​தது​மான கண்​கள், ச்சீ என்று சொல்​லியறி​யாத செதுக்​கியெடுத்த உதடு​கள், கோடாலி முடிச்​சுக்​குள் மூடப்​பட்​டிருக்​கும் புஷ்பம். வாசனை மட்​டும் வேண்​டும் அவளுக்​கு. பூ ஆடம்​பர​மாக வெளி​யில் தெரியக் கூடாது அவளுக்​கு. நெற்​றி​யில் அகல​மான குங்​குமப்​பொட்​டு” என்று தன் தாய் கனகவல்​லியை விவரித்து எழு​தி​யிருக்​கிறார் சூடா​மணி.

கலை உணர்வு கொண்ட கனகவல்​லி, நிறைய சிற்​பங்​களை​யும் ஓவி​யங்​களை​யும் படைத்​தவர். சூடா​மணிக்கு இருபத்து நான்கு வயது ஆனபோது புற்​று​நோ​யால் தாக்​கப்​பட்டு இறந்​து​போ​னார் கனகவல்​லி. சார்​புநிலை​யில் இருந்த சூடா​மணிக்கு இது மாபெரும் இழப்​பு.

சூடா​மணி​யும் அவரது சகோ​தரி​களும் முப்​பது வயதைக் கடந்த நிலை​யில் ஒரு சந்​திப்பு நேர்​கிறது. அக்கா லக் ஷ்மி ஆந்​தி​ரா​வின் எல்​லை​யில் வால்​டேருக்கு அரு​கில் இருந்த மலைப்​பிரதேசத்​தில் வசித்​து​வந்​தார். அவர் அழைப்​பின் பெயரில் சூடா​மணி​யும் சகோ​தரி பத்​மாஸனி​யும் அங்கே புறப்​பட்​டுப் போய் மூன்று வாரம் தங்​கி​னார்​கள்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in