பனிபடர்ந்த பூக்களின் அதிகாலையாக...

பனிபடர்ந்த பூக்களின் அதிகாலையாக...
Updated on
1 min read

சே.பிருந்தா 30 ஆண்​டு​களுக்​கும் மேலாக எழு​திவரு​கிறார். 1999இல் ‘மழை பற்​றிய பகிர்​தல்​கள்’, 2009இல் ‘வீடு முழுக்க வானம்’, 2014இல் ‘மகளுக்​குச் சொன்ன கதை’, 2022இல் ‘நீ​யுறை மனது’ ஆகிய தொகுப்​பு​களி​லிருந்து தேர்ந்​தெடுக்​கப்​பட்ட படைப்​பு​கள் இவை.

மனதில் தோன்​றும் ஒளிக்​கீற்றே கவிதைக்கு போனது​மானது. உதா​ரணம், வீசும் காற்​றில்/ வீடே ஆடு​கிறது/ விளக்​குச் சுடருடன். சுவரின் யதார்த்​தத்​தோடு சுடரின் பிர​மாண்​ட​மான பிம்​பம் ஆடியபடியே விழ, காற்​றில் சுடர் ஆடி வீடே ஆடு​வது போன்று தோன்​றுகிறது.

ஒளிக்​கீற்று போது​மானதல்​ல.. கொஞ்​சம்​போல மெனக்​கெட வேண்​டும் என்ற வகைமை​யிலும் நிறைய எழு​தி​யுள்​ளார். உதா​ரணம், திடும் எனக் காதில் விழுந்​தது/ குயி​லின் குயிலோ​சை/ பிரமையா நிஜமா என்​று/ நிதானிக்​க​வும்/ நேரமில்​லை/ மெலி​தான ஒரு கூவல்/ இப்​போது நினைக்​கை​யில்/ கேவலாகத் தோன்​றுகிறது/ என்ன செய்ய முடி​யும்/ என்​னால்/ தினசரிப் பரபரப்​பில்/ தேய்​கிறது குயி​லின் குரல்/ என்று எழு​தி​விட்டு போவது தவிர என்று முடித்​துள்​ளார். எல்​லா​மும் சாதா​ரண​மாகத் தோன்​றக்​கூடியது​தான்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in