

‘எங்கள் கல்லூரியின் திராவிட மொழிச் சங்கக் கூட்டத்தில் தலைமையேற்று, ‘தமிழின் தனித்து இயங்கும் தன்மை’ எனும் பொருள் பற்றி உரையாடினேன் - 18.3.1901 அன்று தனது நாட்குறிப்பில் வேதாசலம் பிள்ளை இவ்வாறு எழுதியிருக்கிறார்.
இதற்கு 15 ஆண்டுகள் கழித்துத் தனித்தமிழ் இயக்கம் அவரால் தொடங்கப்பட்டது; வடமொழியில் அமைந்திருந்த தனது பெயரைக்கூட ‘மறைமலை’ என அவர் மாற்றிக்கொண்டார்.