

பெருவாரியான மக்களின் ரசனைக்குரிய கலைகளில் முதன்மையானது திரைப்படக் கலை. இந்தியாவைப் பொறுத்தவரை அது குழந்தைப் பருவத்திலிருந்தே தாக்கத்தைச் செலுத்த ஆரம்பித்து, வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிடுகிறது.
இப்படிப்பட்ட திரைப்படக் கலை குறித்து, பள்ளிக் கல்வியில் பாடமாக வைக்க வேண்டும் என்கிறார் இயக்குநரும் எழுத்தாளருமான சீனு ராமசாமி. அப்படிக் கல்வியில் பாடமாக வைக்கும்பட்சத்தில், மாணவர்களுக்கான திரைப்படங்கள் என்று உலகின் மிகச் சிறந்த, எந்தக் காலத்துக்கும் பொருந்தக்கூடிய 20 திரைப்படங்கள் குறித்து எழுதியிருக்கிறார்.