

சென்னைப் புத்தகக் காட்சியைத் தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், 2026ஆம் ஆண்டுக்கான முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருதுகளை சுகுமாரன் (கவிதை), ஆதவன் தீட்சண்யா (சிறுகதை), இரா. முருகன் (நாவல்), பேராசிரியர் பாரதிபுத்திரன் (உரைநடை), கே.எஸ்.கருணா பிரசாத் (நாடகம்) மற்றும் வ.கீதா (மொழிபெயர்ப்பு) ஆகியோருக்கு வழங்கினார்.
தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் நடத்தப்படும் 49வது சென்னை புத்தகக் காட்சி, நந்தனம் ஒய்ம்சிஏ மைதானத்தில் நேற்று தொடங்கியது.
இந்தப் புத்தகக் காட்சியைத் தொடங்கி வைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறந்த படைப்பாளிகளுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருதுகளை வழங்கினார்.
கவிதைக்காக சுகுமாரன், சிறுகதைக்காக ஆதவன் தீட்சண்யா, நாவலுக்காக இரா.முருகன், உரைநடைக்காக பேராசிரியர் பாரதிபுத்திரன், நாடகத்துக்காக கே.எஸ்.கருணா பிரசாத் மற்றும் மொழிபெயர்ப்புக்காக வ.கீதா ஆகியோருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், சென்னையில் 49வது ஆண்டாக நடைபெறும் அறிவுத் திருவிழாவான இந்த புத்தகக்காட்சியைத் தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.