

கொலைக் குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டவர் செல்வம். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். கருணை மனு அடிப்படையில், குடியரசுத் தலைவரால் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையால், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார்.
தன்னுடைய சிறை வாழ்க்கையின் நினைவுகளைத் தொகுத்து, ‘ஒரு தூக்குக் கைதியின் வாக்குமூலம்’ என்ற தலைப்பில் செல்வம் எழுதியுள்ள நூல், தற்போதைய சென்னை புத்தகக் காட்சியில் பேசப்படும் நூல்களில் ஒன்றாகியுள்ளது.