

கிரானைட் ஊழல் என்றதுமே மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம் ஐ.ஏ.எஸ்ஸின் நினைவுதான் பலருக்கும் தோன்றும். அவர் தனது பணிவாழ்க்கையின் சிறு துளியை ‘கடைசித் தறியில் கண்டாங்கிச் சேலை’ என்னும் தன் அனுபவ நூலாக எழுதியிருக்கிறார்.
2012ஆம் ஆண்டு கோஆப்டெக்ஸ் மேலாண் இயக்குநராக சகாயம் பொறுப்பேற்ற பிறகு நடந்த ஏற்றங்களையும் ஏமாற்றங்களையும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளையும் இந்நூலில் பதிவுசெய்துள்ளார்.