

காலனியக் காலகட்டத்தைக் குறித்து வரலாற்றறிஞர் எஸ்.ஜெயசீல ஸ்டீபன் ஆங்கிலத்தில் எழுதிக் குவித்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் தொடர்ந்து தமிழில் வெளியிட்டுவருகிறது.
ஆய்வாளர்களிடத்திலும் தீவிர வாசகர்களிடத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்நூல்வரிசையில் சமீப வெளியீடான தமிழகத்தில் ‘இசைக்கலைஞர்கள், நடனக்காரிகள் மற்றும் நாடக நடிகர்கள்: நிகழ்த்துக்கலை வரலாறும், ஐரோப்பியத் தொடர்பும் தாக்கமும்’ நூலானது வரலாற்றில் ஆர்வமுள்ளவர்களுக்கு மட்டுமின்றி கலை ஆர்வலர்களுக்கும் அரியதொரு கருவூலமாக அமைந்துள்ளது.
தேவாலய இசைக் குழுக்களின் வாயிலாகவும் ராணுவ இசைக் குழுக்களின் வாயிலாகவும் தமிழ்நாட்டில் அறிமுகமான மேற்கத்திய இசை இங்குள்ள நிகழ்த்துகலைகளில் உண்டாக்கிய தாக்கங்களை இந்நூலின் வழியாக அறியமுடிகிறது.