நெஞ்சையள்ளும் கட்டுரைகள் | நூல் வெளி

நெஞ்சையள்ளும் கட்டுரைகள் | நூல் வெளி
Updated on
1 min read

மரபில் புலமை​யும் நவீன இலக்​கி​யத் தோய்​வும் ஒருங்கே அமையப்​பெற்ற வெகு சிலரில் கல்​யாண​ராமன் முக்​கிய​மானவர். ஏறக்​குறையப் பதினைந்து ஆண்​டுக் காலப் பரப்​பில் இவர் எழு​திய கட்டுரைகள், ‘அமு​தின் அமுது’, ‘நடுப்​போரில் தீவைத்​தல்’ என இரு நூல்​களாக வெளிவந்​துள்​ளன.

பல்​வேறு இலக்​கிய வகைமை​கள் மற்​றும் இலக்​கணம், சினி​மா, மொழிபெயர்ப்​பு, ஆளு​மை​கள் என்ற ரீதியிலான கட்டுரைகள் இவை. மரபின் வாசகர் நவீனத்​தை​யும், நவீன வாசகர் மரபையும் தவிர்க்கக் கூடாது என்பதற்காக, மரபை​யும் நவீனத்​தை​யும் கலந்தே ஒவ்​வொரு நூலிலும் அமைத்​துள்​ளது சரியெனத் தோன்​று​கிறது.

ஒவ்​வொரு கட்​டுரை​யிலும் ஏற்​கெ​னவே நிலவி வரும் கருத்​துகளைத் தன் நவீனப் பார்​வைக் கோணத்​தால் கட்​டுடைத்​துப் புதிய திறப்​பு​களைக் கல்​யாண​ராமன் நிகழ்த்​துகிறார். உதா​ரணத்துக்​கு, ‘அன்பை இழப்​ப​தையே பெண் துற​வாகக் கருதுகிறாள்’ என்​ப​தைச் சாத்​த​னாரின் ‘காப்​பிய விசா​ர​மாக’க் காண்​கிறார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in