வரலாற்று வழித்தடமாக அமையும் ஆய்வுகள் | நூல் வெளி

வரலாற்று வழித்தடமாக அமையும் ஆய்வுகள் | நூல் வெளி
Updated on
2 min read

பேராசிரியர் ஆறு. இராமநாதன் நாடறிந்த நாட்டுப்புறவியல் அறிஞர். ஐம்பது ஆண்டுகளாக நாட்டுப்புறவியல் ஆய்வுகளில் ஈடுபட்டு வருபவர். கவிதை, சிறுகதை எனத் தொடங்கி நாட்டுப்புறவியல் ஆய்வுகளில் நிலை கொண்டவர். தமிழ் நாட்டுப்புறவியல் புலத்துக்கு இவரின் ஆய்வுகளும், களப்பணியும், தொகுப்புகளும் முக்கியப் பங்களிப்பை அளித்துள்ளன. முப்பதுக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களைத் தந்தவர்.

நாட்​டுப்​புற இலக்​கியச் சேகரிப்​பு, வகைப்​பாடு, பதிப்​பு, நாட்​டுப்​புறக் கலைகள், நாட்​டுப்​புற வழக்​காறுகள், நாட்​டுப்​புற​வியல் கல்​வி, கோட்​பாட்டு ஆய்வுகள், நெறி​யாளுகை, கள ஆய்​வு, நாட்​டுப்​புற​வியல் அமைப்​பு​கள் எனப் பல தளங்​களி​லும் செயல்​பட்டு வருபவர். தமிழ் நாட்​டுப்​புற​வியலின் முன்​னோடி​யாகத் திகழும் இவரின் அண்​மைப் படைப்​பு, ‘களப்​பணி காட்​டுணவு இன்​னும் சில...’ எனும் தலைப்​பில் வெளிவந்​துள்​ளது.

இந்​நூலில் 24 கட்​டுரைகள் உள்​ளன. முதல் பகு​தி​யில் அமைந்​துள்ள 12 ஆக்​கங்​களும் நாட்​டுப்​புற​வியல் துறை​யில் பன்​முக வளர்​நிலைகளைச் சுட்​டு​வ​தாக அமைந்​துள்​ளன. நாட்​டுப்​புற இலக்​கி​யங்​களை​யும், கலைகளை​யும், வழக்​காறுகளை​யும், பண்​பாட்​டுப் பொதி​களாகக் கொண்டு பயணத்​தைத் தொடங்​கிய நாட்​டுப்​புற​வியல், இன்று பல்​வேறு கொள்​கை, கோட்​பாடு​களை உள்​ளடக்​கியப் பண்​பாட்டு ஆய்​வுத்​துறையாக மலர்ச்​சிப் பெற்​றுள்​ளது.

நாட்​டுப்​புற இலக்​கிய ஒப்​பீடு, நாட்​டுப்​புற மரபறி​வு, தொழில்நுட்​பம், தாவர - உயி​ரிய வழக்​காறுகள், வாய்​மொழி வரலாறு, பொருள்​சார் பண்​பாடு எனப் பண்​பாட்​டியல் புல​மாக அது வளர்ச்சி பெற்று வரு​கிறது என்​பதை இக்​கட்​டுரைகள் உணர்த்​துகின்​றன. ‘கள ஆய்வுகள்’ எனும் கட்​டுரை, நாட்​டுப்​புற​வியல் ஆய்​வு​களின் அடித்​தள​மாக விளங்​கும் கள ஆய்​வின் பல்​வேறு நுட்​பங்​களை​யும் சுட்​டு​வ​தாக அமை​கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in