

2021இல் சாகித்ய அகாதெமி யுவபுரஸ்கார் விருதுபெற்ற நாவலின் தமிழாக்கம் இது. ஆல்ப்ஸ் மலைத்தொடரை ஒட்டிய கார்ணோவியா கற்பனை நகரம். அங்கு பூத்துக்குலுங்கும் வயலட்நிற ஜகரந்தா மலர்களின் அழகைக் காண சுற்றுலாவினர் குவிகின்றனர்.
வழிகாட்டியான அகஸ்டானா அவர்களுக்குச் சொல்லும் காதல் கதைகளிலிருந்து அற்புதமான ஒரு கனவு உலகத்தை திறந்துகாட்டுகிறார் நாவலாசிரியர்.
மேய்ச்சல்காரன்றாக்கியஸை நேசிக்கும் சிபில்லா, நோயின் பிடியில் விழுந்து மடிகிறாள். ஏழைக் காதலனின் நினைவுகளில் வதைபடும் டைன்வென் என்பவள் பிரபு குடும்பத்தைச் சேர்ந்தவள். காதல் நினைவுகளிலிருந்து தப்பிக்க தேவதையிடமிருந்து புனித பானம்பெற்று அருந்தி சொர்க்கம் செல்கிறாள்.
சுற்றுலாப் பயணிகளுக்கு இந்தக் கதைகளை சொல்லிக்கொண்டிருக்கும் அகஸ்டானா, காதலானது இன்பத்தை மட்டுமல்ல, துயரத்தையும் பரிசாகத் தரக்கூடியது என்பதை அறியாதவனல்ல.