

தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சாதிவாரிக் கணக்கெடுப்பைச் சேர்க்கப்போவதாக மத்திய அரசு அறிவித்திருக்கும் நிலையில் சாதிவாரிக் கணக்கெடுப்பின் அரசியல் குறித்து வரலாற்றுத் தரவுகளுடன் ஆவணப்படுத்தியுள்ளார் ஆனந்த் டெல்டும்டே.
பேராசிரியரும் மனித உரிமைகள் செயல்பாட்டாளருமான ஆனந்த் டெல்டும்டே, சாதிவாரிக் கணக்கெடுப்பின் உண்மையான நோக்கம் என்ன எனக் கேள்வியெழுப்புகிறார்.
இடஒதுக்கீட்டுக்காக மட்டுமே இந்தக் கணக்கெடுப்பு பயன்படுகிறதா, ‘சமூக நீதி’ என்கிற போர்வையால் சாதிகளின் இருப்பு உறுதிசெய்யப்படுகிறதா என்பதையும் இந்நூலில் இவர் ஆராய்கிறார்.
இந்தியாவில் சாதிகள் எப்படிப் புகுத்தப்பட்டுக் காலந்தோறும் ஆள்வோரால் நிலைநிறுத்தப்பட்டன என்பதைச் சான்றுகளோடு ஆனந்த் டெல்டும்டே நிறுவுகிறார்.