புத்தகத் திருவிழா | திண்ணை

புத்தகத் திருவிழா | திண்ணை
Updated on
1 min read

விதைகள் வாசகர் வட்​டம் மற்​றும் ஸ்ரீ சுந்​தர் மஹால் இணைந்து நடத்​தும் 9ஆம் ஆண்டு சத்​தி​யமங்​கலம் புத்​தகத் திரு​விழா ஜூலை 10ஆம் தேதி தொடங்​கியது. சத்​தி​யமங்​கலம் திப்​புசுல்​தான் ரோட்​டில் உள்ள ஸ்ரீ சுந்​தர் மஹாலில் வரும் 15ஆம் தேதி வரை தின​மும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடை​பெறும் இந்​தப் புத்​தகத் திரு​விழா​வில் பல பதிப்​பகங்​கள் பங்​கேற்​கின்​றன.

கருத்​துரை, கதை சொல்​லல், நூல் வெளி​யீடு, விருது வழங்​குதல் என பல நிகழ்​வு​கள் நடை​பெறுகின்​றன. முதல் நாளில் சென்னை உயர் நீதி​மன்ற மேனாள் நீதிபதி எஸ்​.​விமலா புத்​தகத் திரு​விழா​வைத் தொடங்கி வைத்து சிறப்​புரை​யாற்​றி​னார். தொடர்ந்து வரும் நாட்​களில் ராணுவ விஞ்​ஞானி வி.டில்​லி​பாபு, கவிஞர் நா.​முத்​து​நில​வன், திரைப்​படப் பாடலாசிரியர் யுக​பாரதி உள்​ளிட்​டோர் உரை​யாற்​றுகின்​றனர்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in