

வாழ்வின் பெருவெளிக்குள் சிக்குண்டிருக்கும் மனித மனத்தின் கசடுகளை, வன்முறையை, கொடூரத்தை அதன் வழி ஏற்படும் இருண்மையை, அலங்காரங்கள் ஏதுமின்றி இயல்பாகப் பேசுகிறது ‘அழல்’.
ஏழு பாகங்களாக விரியும் இந்நாவலின் கதை, முதல் பக்கத்தில் இருந்தே தன்னை உள்ளிழுத்துக் கொள்வதற்கு, மதி அழகன் பழனிச்சாமியின் வேகமான மொழி நடையும் காரணம்.