

‘அந்திமழை’ மார்ச் இதழின் முதல் சில பக்கங்களில் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு குறித்து சி.மகேந்திரன் எழுதிய அஞ்சலிக் கட்டுரை இடம்பெற்றுள்ளது. இதில், நல்லகண்ணு, எளியவராக தெரிந்தாலும் வசதியான பின்புலம் கொண்டவர், அவர்கள் வீட்டில் எல்லோரும் அக்காலத்திலேயே உயர் படிப்பு படித்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளது.
நல்லகண்ணு கட்சியில் உயர் பொறுப்புக்கு வந்தபோதும் கடைசிவரை எளிமையாகவே வாழ்ந்துவிட்டுப் போனவர் என்பதுதான் இதன் செய்தி. இரா.பிரபாகரின் ‘திசையாற்றுப்படை’ தொடரில், ‘பராசக்தி’ படப்பிடிப்பின் இந்திப் போராட்ட காட்சிகளில் நடித்த அனுபவங்களை விவரித்துள்ளார்.