உரையாடல்களால் நிரம்பிய வாழ்வோவியம் | நூல் வெளி

உரையாடல்களால் நிரம்பிய வாழ்வோவியம் | நூல் வெளி
Updated on
1 min read

​வாழ்​வின் உன்​னத​மான தருணங்​களை ரசனை​யுடன் தரிசிக்​கத் தரும் அண்​டனூர் சுரா, துயர​மான களங்​களைப் பதிவு செய்ய முற்​படும்​போது ரத்​த​மும் சதை​யு​மாய் ஈரப் பிசுபிசுப்பை வாசக மனத்​துள் கடத்​திச் செல்​பவ​ராக இருக்​கிறார். ‘அண்​டனூர் சுரா சிறுகதைகள் 100’ உரு​வத்​தில் மட்​டுமன்றி உள்​ளடக்​கத்​தி​லும் வசீகரிக்​கிறது.

இத்​தொகுப்​பின் முதல் கதை​யான ‘மிடற்​றுத் தாகம்’ அகதி​களின் துயர வாழ்​வை, தமிழ் எழுத்​துல​கம் இது​வரை அறி​யாத காட்​சிகளில் எடுத்து வைக்​கிறது. துவண்​டிருக்​கும் குழந்​தை​யுடன் வீடு​வீ​டாய்ப் பாலுக்​காக அலை​வுறும் தாய், வாசிப்​பவரைப் பதற்​றத்​திற்கு உள்​ளாக்​கு​கிறாள்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in