

‘ஆகிருதி’ தொகுப்பின் கதைகள், நேசிப்பை மட்டுமே சுற்றி வருகின்றன. அப்படி நேசிக்கமுடியாமல் போனால் அதற்கு என்ன காரணம் என்று கேள்வியும் எழுகிறது. அதற்கு விடையாக தனது கதைகளையே கேள்விகளாக நிறுத்தியுள்ளார் சரிதா ஜோ.
உண்மையான அன்பு செலுத்தும் குழந்தைகளின் பணத்தை அபகரித்து, உதவுவதாக பொய்சொல்லி குழந்தைதானே என ஏமாற்றுவதால் வாழ்நாள் முழுவதும் அது ஒரு வடுவாக மாறிவிடாதா (வாக்கு), கருப்பு என்று காரணம் காட்டி மகா என்ற இளம்பெண்ணை கணவர், மாமியார் வீட்டார் வெறுத்தொதுக்கி வெளியேற்றும்போது, அவளின் உண்மையான ஆகிருதிக்காக நேசிக்கவும் ஒருவன் வரத்தானே செய்கிறான்... (ஆகிருதி).