Published : 14 Oct 2017 10:27 AM
Last Updated : 14 Oct 2017 10:27 AM
பொ
துவுடைமை, காந்தியம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு என்று பல இயக்கங்களோடும் தன்னை இணைத்துக்கொண்டு தீவிரமாகச் செயல்பட்டுவருபவர் ஈரோட்டைச் சேர்ந்த மருத்துவர் வெ.ஜீவானந்தம். சமதர்மம் பேசுவோரும் காந்தியம் பேசுவோரும் தமக்கு இடையிலான தொடர்புப் புள்ளிகளில் இணைய வேண்டியதன் அவசியமும் தேவைகளும் அதிகரித்துவரும் இக்காலத்தில், வெ.ஜீவானந்தம் ஒருங்கிணைப்பில் மூன்றாண்டுகளாக வெளிவரும் இடது காலாண்டிதழ் அத்தகைய ஒரு நல்ல முயற்சி. ஆண்டுக்கு நான்கு இதழ்கள், ஒவ்வொரு இதழுக்கும் சர்வதேசத் தரத்திலான பத்து ஆய்வுக் கட்டுரைகளின் மொழிபெயர்ப்புகள், ஆயிரம் சந்தாதாரர்கள் என்ற திட்டத்தோடு இடது காலாண்டிதழ் தொடங்கப்பட்டது.
சமீபத்தில் வெளிவந்திருக்கும் 12-வது இதழ், காரல் மார்க்ஸின் இருநூறாவது பிறந்த நாள், சோவியத் ரஷ்யப் புரட்சியின் நூறாவது ஆண்டு, நக்சல்பாரி இயக்கத்தின் ஐம்பதாவது ஆண்டு ஆகியவற்றை நினைவுகூரும்வகையில் அமைந்துள்ளது. நக்சல்பாரி இயக்கம் பற்றிய வரலாற்று நூலாசிரியர் சுமந்தா பானர்ஜி, எகனாமிக் அன்ட் பொலிடிக்கல் வீக்லி இதழில் எழுதிய ‘நக்சல்பாரியிலிருந்து சத்தீஸ்கர் வரை’ என்ற கட்டுரையின் மொழிபெயர்ப்பு, இந்த இதழின் சிறப்பம்சம்.
-புவி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT