Published : 28 Jan 2023 06:47 AM
Last Updated : 28 Jan 2023 06:47 AM

ப்ரீமியம்
நூல் நயம்: அனுபவங்களின் கொள்ளிடம்

பத்திரிகையாளர் ராஜாவின் நாவல் இது. தனியார் தொலைக்காட்சி செய்தி வடிவத்தை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவர். செய்திகளை இவர் செம்மையாக்கும் விதத்தை அருகிலிருந்து பார்த்த அனுபவம் எனக்குண்டு. நவீனத் தமிழ் எழுத்தாளர்கள் பயில வேண்டிய பத்திரிகை மொழியில் ராஜாவுக்கு நல்ல பயிற்சி உண்டு என்பதை இந்நாவலின் விவரிப்பு வழி அறிந்துகொள்ள முடிகிறது. காவிரியின் வெள்ளத்தைக் கொள்ளும் கொள்ளிடம் ஆற்றங்கரையில் உள்ள ஒரு சிற்றூரின் கதை இது.

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள கருப்பேரி அது. இந்நாவலும் ராஜாவின் அனுபவ வெள்ளத்தைக் கொள்ளும் வடிகாலாகத் தொழில்பட்டுள்ளது. தன் பால்ய கால அனுபவங்களை மதித்து அதைப் புனைவு என்கிற வடிவத்தில் ராஜா இதில் பதிவுசெய்துள்ளார். அறிவியல் வளர்ச்சியால் பயன்படுபொருள்கள் பெருகிவிட்ட இந்தக் காலத்திலிருந்து ஐம்பது, அறுபது வருடங்களுக்கு முன்புள்ள காலகட்டத்தைச் சித்தரிக்கும் விதத்தில் இந்நாவல் அந்தக் காலகட்ட நினைவேக்கத்தை அளிக்கிறது. அந்தக் காலத்தின் எளிமையான வாழ்க்கை, இயல்பான மனிதர்கள் என எல்லாமும் வாசிப்புக்கு ஆசுவாசம் அளிக்கின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x