Published : 26 Nov 2022 06:49 AM
Last Updated : 26 Nov 2022 06:49 AM

ப்ரீமியம்
திண்ணை: சென்னை உலகப் புத்தகக்காட்சி 2023

சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் உலகப் புத்தகக்காட்சி குறித்த கருத்துப் பரிமாற்றம், நூலகத் துறை இயக்குநர் இளம்பகவத் தலைமையில் கடந்த வாரம் நடைபெற்றது. இந்தக் கலந்தாய்வில் தமிழ்நாடு பாடநூல் நிறுவன இணை இயக்குநர் சங்கர சரவணன், பபாசி தலைவர் வைரவன், மேனாள் தலைவர் காந்தி கண்ணதாசன், பதிப்பாளர் ஆழி செந்தில்நாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தமிழில் வெளிவந்த நூல்களை மற்ற மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்யவும் அயல் நூல்களைத் தமிழில் மொழிமாற்றம் செய்யவும் பதிப்பாளர்களுக்கிடையே ஒப்பந்தங்களை ஏற்படுத்த இந்தப் புத்தகக்காட்சி வழிவகுக்கும் என இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த வாய்ப்பைத் தமிழ்ப் பதிப்பாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தாங்கள் வெளியிட்ட நூல்களில் சிறந்த நூல்களைத் தேர்ந்தெடுத்து, அந்நூல் குறித்த சுருக்கத்தை ஆங்கிலத்தில் தயார்செய்து, வரும் உலகப் புத்தகக்காட்சியில் காட்சிப்படுத்தும்போது, அந்நூலுக்கு உலகளவில் வரவேற்பு கிடைக்கும் என்றும் அரசு சார்பில் கூறப்பட்டது.

சேலம் புத்தகக்காட்சி | இந்து தமிழ் திசை அரங்குகள்: 85, 160 - புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சித் திடலில் சேலம் புத்தகக்காட்சி நடைபெற்றுவருகிறது. மாவட்ட நிர்வாகமும் தென்னிந்தியப் புத்தகப் பதிப்பாளர்கள் சங்கமும் இணைந்து இதை ஒருங்கிணைத்துள்ளன. இந்தப் புத்தகக்காட்சியில் 210 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 100 பதிப்பகங்கள் கலந்துகொண்டுள்ளன. நவம்பர் 30ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் புத்தகக்காட்சியில், ‘இந்து தமிழ் திசை’யின் அரங்கு எண்கள் 85, 160. ‘இந்து தமிழ் திசை’ வெளியீடுகள் இங்கு கிடைக்கும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x