Published : 26 Nov 2022 06:47 AM
Last Updated : 26 Nov 2022 06:47 AM

ப்ரீமியம்
நூல் நயம்: போராட்ட வரலாறு

சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளைக் களைவதற்கும், சமத்துவத்தை உருவாக்குவதற்கும் வர்க்கப் போராட்டங்களே அடித்தளமாக உள்ளன. வரலாற்றுரீதியாகச் சமூகத்தை வளர்ச்சியை நோக்கியும், மேன்மையை நோக்கியும் அவையே உந்தித் தள்ளின. பல வகையான சுரண்டல்களுக்கும், அத்துமீறல்களுக்கும் ஆட்பட்டிருந்த நம் சமுதாய அமைப்பை அவற்றிலிருந்து மீட்டெடுத்து, முற்போக்குத் திசையில் பயணிக்க வைத்த வர்க்கப் போராட்டங்களில் முகம் தெரியாத பல தோழர்கள் பங்கேற்றனர்; பங்கேற்று வருகின்றனர்.

அத்தகைய தோழர்களில் குறிப்பிடத்தக்க 10 பேரை இந்நூல் அறியப்படுத்துகிறது. காலங்காலமாக ஆளும் வர்க்கத்துக்கு எதிராகக் கம்யூனிஸ்ட்டுகள் ஆற்றிவரும் களப்பணி அளப்பரியது. இந்தச் சூழலில், வர்க்க அரசியலின் தாக்கம் தெரியாமல் வளர்ந்துநிற்கும் இன்றைய தலைமுறையினருக்கு, வர்க்க அரசியலின் மகத்துவத்தை உணர்த்தும் விதமாக இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. இன்று நாம் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்கும் ஏதோ ஒருவகையில் காரணமாக இருக்கும் இந்தத் தோழர்களின் தியாகங்களையும் போராட்டங்களையும் இந்நூல் வரலாற்றில் நிலைநிறுத்தியுள்ளது. - ஹுசைன்

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x