Published : 19 Nov 2022 06:51 AM
Last Updated : 19 Nov 2022 06:51 AM

ப்ரீமியம்
திண்ணை: இத்தாலியில் பெருமாள்முருகன்!

எழுத்தாளர் பெருமாள்முருகனின் ‘பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை’ நாவலை இத்தாலியைச் சேர்ந்த தமிழ் ஆய்வு மாணவி டோரோட்டியா இத்தாலிய மொழியில் மொழிபெயர்த்துள்ளார். இத்தாலியின் முன்னணிப் பதிப்பகமான உடோபியா இதற்கான உரிமையைக் காலச்சுவடு பதிப்பகத்திடமிருந்து பெற்றுள்ளது. ‘தேம்பாவணி’யைத் தந்த இத்தாலியைச் சேர்ந்த வீரமாமுனிவர் 300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்த் தொண்டாற்றியுள்ளார். ஆனால், தமிழிலிருந்து இத்தாலிக்கு ஒரு நூல் நேரடியாக மொழிபெயர்க்கப்படுவது இதுவே முதல்முறை எனச் சொல்லப்படுகிறது.

முடியரசன் பேச்சுப் போட்டி: திராவிடத் தலைவர் அண்ணாவால் ‘திராவிட நாட்டின் வானம்பாடிக் கவிஞா்’ எனப் புகழப்பட்டவர் வீறுகவியரசர் முடியரசன். அவர் படைப்புகள் குறித்து உலக அளவிலான பேச்சுப் போட்டியை ‘வீறுகவியரசர் முடியரசர் அவைக்களம்’ அமைப்பு ஒருங்கிணைத்துள்ளது. போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் தங்கள் உரைகளைக் காணொளிகளாகப் பதிவுசெய்து அனுப்பிவைக்க வேண்டும். போட்டி தொடர்பான தகவல்களும் விதிமுறைகளும் விண்ணப்பப் படிவமும் இந்தச் சுட்டியில் தரப்பட்டுள்ளன: https://mudiyarasan.org/போட்டி

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x