Published : 19 Nov 2022 06:45 AM
Last Updated : 19 Nov 2022 06:45 AM
தமிழ் மொழியின் எல்லையற்ற சமவெளியில் இழைந்தோடும் இசை வெள்ளமாக விளங்கிய பாவலனுக்கு நூற்றாண்டு இது. செம்பதாகைகளின் செந்தூர மின்னல்களில் ஒலியெடுத்துக் கவிசெய்த உன்னதக் கவிஞனுக்கு நூற்றாண்டு!
எக்காலத்திலும் தன்னை ஒரு மக்கள் கவியாகவே உருவகித்துக்கொண்ட கே.சி.எஸ்.அருணாசலத்துக்கு நூற்றாண்டைக் கொண்டாடுகிறோம். நினைவுகளின் கோலாகலத்தில் மனது நிரம்பிவழிகிறது. 1921இல் பிறந்த கவிஞர், வறுமையைத் தழுவ நேரிட்டபோதிலும், சமூக உணர்வுமிக்க இளைஞராக வளர்ந்தார். தமிழகத்தில் பொதுவுடமைக் கருத்துகளை விதைத்த ப.ஜீவானந்தம், பொள்ளாச்சியைப் பூர்விகமாகக் கொண்ட கே.பாலதண்டாயுதம், பி.கே.ராமசாமி ஆகிய கம்யூனிஸ்ட் தலைவர்களை வழிகாட்டிகளாகக் கொண்டு ‘தீவிர வாலிபர் சங்கம்’ அமைத்து தேச விடுதலைப் போராட்டங்களில் கே.சி.எஸ். ஈடுபட்டார். தொடக்கத்தில் மேடை நாடகத் துறையில் ஈடுபாடு காட்டினார். எண்ணற்ற நாடகங்களை முற்போக்குச் சிந்தனைகளின் முகபடாம்போல எழுதிக் குவித்தார். ‘அமுதம்’, ‘நீதி’, ‘மாதமணி’, ‘வசந்தம்’ இதழ்களில் முத்திரை பதித்தார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT