Published : 12 Nov 2022 06:36 AM
Last Updated : 12 Nov 2022 06:36 AM
தமிழ் இலக்கியத் திறனாய்வு, தமிழ் மொழியைப் போல் தொன்மை கொண்டது. தொல்காப்பியம் தொடங்கி எழுத்தாளர் ஜெயமோகனின் விமர்சனக் கட்டுரைகள் வரையிலான ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தமிழ் விமர்சன மரபைப் பல்வேறு பொருள் தலைப்புகளில் பேராசிரியர் எம்.வேதசகாயகுமார் ‘இலக்கியத் திறனாய்வுக் களஞ்சியம்’ என்கிற தலைப்பின் கீழ் தொகுத்துள்ளார்.
தமிழ் கலைக் களஞ்சியத் தயாரிப்பின் செய்நேர்த்தியில் இந்த நூலைப் பேராசிரியர் உருவாக்கியுள்ளார். தமிழ் விமர்சன வரலாற்றைப் பேராசிரியர்கள் க.பூரணசந்திரனும் க.பஞ்சாங்கமும் தங்கள் நூல்களின்வழி பதிவுசெய்துள்ளனர். இந்த முறைப்பாட்டில் வேதசகாயகுமாரின் இந்நூலும் கவனம் கொள்ளத்தக்கது. இந்நூல் தமிழ் விமர்சனக் களஞ்சியத்தை ஆவணப்படுத்துவதன் வழி தமிழ் நவீன இலக்கியம் உருவான வரலாற்றுச் சித்திரத்தையும் வாசகர்களுக்கு உருவாக்கிக் காட்டுகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT