Published : 29 Oct 2022 06:49 AM
Last Updated : 29 Oct 2022 06:49 AM
தமிழ்ச் சமூகம் தொல்பழங்காலத்தில் பெண்ணையே தலைவியாகக் கொண்டு இயங்கியது. அவள் எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் அச்சமூகம் கட்டுப்பட்டது. பின்னர் இனக்குழுக்களிடையே நடைபெற்ற போர்களில் அத்தலைமைப் பதவி ஆண்களிடம் சென்றுவிட்டது. அடுத்து, நிலைத்தகுடிகளாக மாறிய நிலவுடைமைச் சமூகத்தில் பெண் தெய்வநிலைக்கு உயர்த்தப்பட்டாள். அதிகாரத்தை முழுமையாக ஆண்கள் எடுத்துக்கொண்டனர். இன்றுவரை இந்நிலையே தொடர்கிறது. ‘தாய்வழிச் சமூகம்: வாழ்வும் வழிபாடும்’ என்ற கோ.சசிகலாவின் நூல் இத்தகைய வரலாற்றைத் தொல்லியல் தரவுகளுடனும் தகுந்த படங்களுடனும் முன்வைக்கிறது. கோ.சசிகலா தொடர்ச்சியாக இத்தகைய ஆய்வுகளில் ஈடுபட்டுவருகிறார். இவர் ஏற்கெனவே எழுதியுள்ள ‘தொல்லியல் நோக்கில் சங்ககாலச் சமூகம்’, ‘தொல்லியல் நோக்கில் தமிழ்நாட்டுக் கடவுளரும் வழிபாட்டு மரபுகளும்’ ஆகிய நூல்களும் முக்கியமானவை. இவர், தொல்லியல் அறிஞர் ர.பூங்குன்றனுடன் இணைந்தும் பல முக்கியமான ஆய்வுகளைத் தமிழுக்கு அளித்துள்ளார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT