Last Updated : 22 Oct, 2022 07:12 AM

 

Published : 22 Oct 2022 07:12 AM
Last Updated : 22 Oct 2022 07:12 AM

ப்ரீமியம்
நூல் நயம்: வழியெங்கும் எதிரொலிக்கும் வலி

ஆப்கானிஸ்தானில் பிறந்து அமெரிக்காவில் அகதியாகக் குடியேறியவர் எழுத்தாளர் காலித் ஹுசைனி. இவர் எழுதி 2013இல் வெளிவந்த ‘அண்டு தி மௌண்டன்ஸ் எக்கோடு’ என்ற நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பே ‘மலைகளும் எதிரொலித்தன’. இதை சதீஷ் வெங்கடேசன் மொழிபெயர்த்துள்ளார். கடின உழைப்பின் வழியே ஐந்து குழந்தைகளுடன் வாழ்க்கையை நகர்த்திச்செல்லும் ஓர் ஏழை விவசாயி, கொடிய அரக்கன் ஒருவனுக்குத் தன் குழந்தைகளில் ஒன்றைக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அவரும் அவருடைய மனைவியும் கண்ணை மூடிக்கொண்டு ஐந்தில் ஒன்றைத் தேர்வுசெய்கிறார்கள். தேர்வுசெய்யப்பட்ட அந்த அதிர்ஷ்டமற்ற குழந்தை அவர்களுக்கு மிகவும் விருப்பமான குழந்தை. துக்கத்தின் ஆழத்தில் விழும் அந்த விவசாயி தன்னுடைய குழந்தையைக் காடு, மலை தாண்டிச் சென்று கண்டுபிடிக்கிறார். அந்த அரக்கனின் அழகிய மாளிகையில், பசுமையான தோட்டத்தில் அவருடைய குழந்தை, தனது கடந்த காலம் குறித்து எவ்விதப் பிரக்ஞையுமற்று மிகுந்த மகிழ்ச்சியுடன் விளையாடிக்கொண்டிருந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x