Published : 22 Oct 2022 07:08 AM
Last Updated : 22 Oct 2022 07:08 AM
இந்தச் சமூக ஊடக யுகத்தில் எழுதியவற்றை, எழுதியவரே மறந்துவிடும் காலம் இது. ஆனால், இதிலிருந்து வித்தியாசப்படுகிறார், லண்டனில் வசிக்கும் கன்னியாகுமரியைச் சேர்ந்த முனைவர் ஃபாசில் ஃப்ரீமேன் அலி. ஓர் இடதுசாரித் தந்தைக்குப் பிறந்த ஃபாசில், சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் பல ஆண்டுகளாக எழுதிய எண்ணச் சிதறல்களின் கலவைதான் ‘எண்ணப்பூக்கள்’ நூல். நூலில் சமகால சமூகப் போக்குகள், பொதுவுடமைக் கொள்கைகள், சமூக அரசியல், பொருளாதாரம், தனிமனித வாழ்க்கை, அதன் நெறிமுறைகள் எனப் பல அம்சங்களையும் ஆழ்ந்த ஈடுபாட்டோடு எழுதியிருப்பதை உணர முடிகிறது. பல கட்டுரைகள் விசாலமான பார்வையையும் கொண்டிருக்கின்றன. சமூக ஊடகங்களை வெறுமனே பொழுதுபோக்கிற்காகப் பயன்படுத்தாமல், அதில் எழுதும் எண்ணங்களை ஒரு நூலாகவும் கொண்டுவர முடியும் என்பதற்கு ‘எண்ணப் பூக்கள்’ உதாரணமாகியிருக்கிறது. - டி.கே.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT