Published : 08 Oct 2022 07:04 AM
Last Updated : 08 Oct 2022 07:04 AM

ப்ரீமியம்
நூல் வெளி: பதிப்புத் தொண்டைப் பறைசாற்றும் நூல்

ஜெயன்

தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு பதிப்பகம் முல்லை; அதன் பதிப்பாளர் முத்தையா. அவரால் 1944இல் தொடங்கப்பட்டது இந்தப் பதிப்பகம். பாவேந்தர் பாரதிதாசனின் ‘அழகின் சிரிப்பு’, ‘பாண்டியன் பரிசு’, ‘நல்ல தீர்ப்பு’, ‘காதல் நினைவுகள்’ உள்ளிட்ட பல நூல்களை நல்ல முறையில் பதிப்பித்தது. பாரதிதாசன் பாடல்கள்மீது கொண்ட ஈர்ப்பால் அவற்றை வெளியிடுவதற்காகவே முத்தையா இந்தப் பதிப்பகத்தைத் தொடங்கினார். ‘முல்லை’ என்ற பெயரையும் பாவேந்தரே முன்மொழிந்திருக்கிறார். பிற்காலத்தில் தமிழ்நாட்டில் பிரபலமான மனநல சுயமுன்னேற்ற(?) எழுத்தாளராக மலர்ந்த எம்.எஸ்.உதயமூர்த்தியின் முதல் நூலையும் முல்லை வெளியிட்டது. முத்தையா முதலில் தொடங்கி நடத்திய கமலா பிரசுராலயம் ராஜாஜியின் முதல் நூலான ‘மதுவிலக்கு’ வெளியிட்டது குறிப்பிடத்தகுந்தது. முத்தையாவின் நூற்றாண்டு இது. அவரைக் கெளரவிக்கும் வகையில் (‘முல்லை’ பழநியப்பன்) முத்தையா குறித்த அருந்தகவல்களையும் முத்தையா குறித்த அறிஞர்களின் கட்டுரைகளையும் தொகுத்து முல்லை பதிப்பகம் ‘முல்லை முத்தையா நூற்றாண்டு மல’ரை வெளியிட்டுள்ளது. வரலாற்றாசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதியின் கட்டுரை முல்லையின் விரிவான வரலாற்றைச் சொல்லிவிடுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x