நல்வரவு: வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு

நல்வரவு: வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
Updated on
2 min read

வள்ளலாரைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ளப் படாததற்குக் காரணம், அவரது வாழ்க்கை வரலாறு முழு அளவில் வெளிவராததுதான். அதனால் அதை எளிய முறையில் கூறிய ம.பொ.சிவஞானத்தின் நூலின் மறுபதிப்பு இது.

வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு,
ம.பொ.சிவஞானம்,
முல்லை பதிப்பகம்,
விலை: ரூ.120, தொடர்புக்கு: 9840358301

ராஜஸ்தான் மாநிலத்தைப் பற்றிய ஒரு முழுமையான அபிப்பிராயத்தை உருவாக்கிக்கொள்ள இந்த நூல் உதவும். நிலத்துடன் அம்மாநிலத்தின் பண்பாட்டையும் நூலாசிரியர் வாசகர்களுக்குச் சொல்கிறார்.

ராஜஸ்தான் ஒரு பார்வை,
லக்‌ஷ்மி ரமணன்,
ஆனந்தாயீ எண்டர்பிரைஸ்
விலை: ரூ.300, தொடர்புக்கு: 9367781348

சங்க நூல்களின் முதல் பகுதியாகிய பத்துப்பாட்டை எளிய, இனிய நடையில் உரைநடையாக இந்த நூலில் நாராயண வேலுப்பிள்ளை தந்துள்ளார். வாசகர்கள் அனுபவித்துணர வேண்டிய கருத்துகளைக் கொண்டது பத்துப்பாட்டு.

சங்க இலக்கியம் வழங்கும் பத்துப்பாட்டு,
எம்.நாராயண வேலுப்பிள்ளை,
நர்மதா பதிப்பகம்
விலை: ரூ.95, தொடர்புக்கு: 98402 26661

எளிய வார்த்தைக் கட்டுமானத்தில் நல்ல அனுபவம் மிக்க கவிதைகளை நாகநந்தினி உருவாக்கியுள்ளார். பெண்களின் தனித்துவமான அம்சங்கள் இதில் வெளிப்பட்டுள்ளன.

மெளனம் துறக்கும் பெண்மை, நாகநந்தினி, ஓவியா பதிப்பகம், விலை: ரூ.100
தொடர்புக்கு: 7667557114

இன்றைய காலகட்டத்தில் கடன் இல்லாமல் நடுத்தர வாழ்க்கையைக் கொண்டு செல்ல முடியாத சூழல். இந்நிலையில், அந்தக் கடன் குறித்த நம் சந்தேகங்களுக்கான விடையாக இந்த நூல் இருக்கிறது.

கடன் தீதும் நன்றும்
சோம.வள்ளியப்பன்,
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
விலை: ரூ.250, தொடர்புக்கு: 044 42009603

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in