Published : 01 Oct 2022 06:44 AM
Last Updated : 01 Oct 2022 06:44 AM

ப்ரீமியம்
நூல்நோக்கு: நாஞ்சில் நாட்டுக் கதைகள்

சுப்பிரமணி ரமேஷ்

ராம் தங்கத்தின் சமீபத்திய சிறுகதைத் தொகுப்பு ‘புலிக்குத்தி’. இவரது புனைவு உலகம் பதின்பருவச் சிறுவர்கள் குறித்தானது. பல்வேறு காரணங்களால் அகப்புற நெருக்கடிக்குள்ளாகும் சிறுவர்கள், இவரது கதைகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.

எழுத்தாளரையும் மீறி அவர்கள் இவரது புனைவில் ஊடுருவுவதாகவே கருதுகிறேன். ராம் தங்கம் காட்டும் சிறுவர்களின் உலகம் விவரிக்க முடியாத புதிர்த்தன்மையும் துயரங்களும் நிரம்பியது. குறிப்பாக, அம்மாவை இழந்த சிறுவர்களின் வாழ்க்கை இச்சமூகத்தின் மீது நிகழ்த்தும் ஊடாட்டத்தைக் கூர்ந்த அவதானிப்புடன் எழுதிவருகிறார். எதிர்பாராமல் நிகழும் இழப்புகளும் அதனூடாக அவர்களைச் சூழ்ந்துகொள்ளும் வறுமையும் படைப்பாளரை வெகுவாகப் பாதித்திருக்கின்றன. இளமையில் வறுமை மிகக் கொடியது என்பது ஔவையின் வாக்கு. எப்படிக் கொடியது என்பதை ஔவை விளக்கவில்லை. ராம் தங்கத்தின் பல கதைகள் இதனை ஊடறுத்துச் சென்றிருக்கின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x