Last Updated : 24 Sep, 2022 07:10 AM

 

Published : 24 Sep 2022 07:10 AM
Last Updated : 24 Sep 2022 07:10 AM

ப்ரீமியம்
கு. அழகிரிசாமி நூற்றாண்டு | ‘கவிஞர்’ கு.அழகிரிசாமி!

புதுமைப்பித்தன் பரம்பரையில் பூத்த மலர், கு.அழகிரிசாமி. புதுமைப்பித்தனைப் போலவே சிறுகதையில் சாதனை படைத்தவர் அவர். எளிய நடை, சித்திரிப்பின் லாகவம், உள்ளோடும் துயர இழை, அமர்த்தலான நகைச்சுவை, கமழும் மண்ணின் மணம், உள்ளடக்கத்திற்கு ஏற்ற சொல்லாட்சி எனப் பல அழகுகள் கூடிச்சேர்ந்தது அவரது எழுத்துக் கலை. தமிழில் சிறுகதைக்காகச் சாகித்ய அகாடமியின் விருதைப் பெற்ற முதல் எழுத்தாளர் கு.அழகிரிசாமிதான் (1970). அதைக் காண வாய்ப்பைப் பெறாத துரதிர்ஷ்டசாலியும் அவரே.

கதையைத் தவிர கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை, நாடகம், நாவல், பதிப்பு எனப் பல துறைகளிலும் அவர் தன் ஆற்றலைக் குறைந்த ஆயுளுக்குள் பதிவுசெய்திருக்கிறார். கவிதையைக் கையில் எடுத்தாலும் புதுமைப்பித்தன் பாதி வழியில், அதை விட்டுவிட்டு வந்துவிட்டார். கு.அழகிரிசாமி இலக்கிய உலகில் நுழைந்தது கவிதையையும் மொழிபெயர்ப்பையும் கைபிடித்துக் கொண்டுதான். அழகிரிசாமி, கவிதையைச் சிறுகதையைப் போலப் போஷிக்கவில்லையே தவிர, அதைக் கைவிடவில்லை. அழகிரிசாமியின் அறியப்படாத கவிதை முகத்தின் ஒரு சாயலை இக்குறிப்பில் நாம் பார்க்கலாம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x