Published : 17 Sep 2022 07:05 AM
Last Updated : 17 Sep 2022 07:05 AM

ப்ரீமியம்
மதவாதத்தை எதிர்ப்பதற்கான கையேடு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், ‘நக்கீரன்’ இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. ‘மகாத்மா மண்ணில் மதவெறி’ என்னும் தலைப்புக் கட்டுரை, டெல்லியில் நடைபெற்ற 73ஆம் குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டுச் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் சிலைகள் அடங்கிய வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது, கோவையில் காந்தி நினைவு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் காந்தியைக் கொன்ற கோட்ஸேவின் பெயரை உச்சரிக்கக் கூடாது என்று காவல் துறை அதிகாரிகள் சிலர் தடைவிதித்தது உள்ளிட்ட சமகால நிகழ்வுகளுக்கும் அரசியலில் இந்துத்துவ சக்திகள் பெற்றுவரும் ஆதிக்கத்துக்கும் உள்ள தொடர்பைத் தர்க்கபூர்வமாக விளக்குகிறது. சிறுபான்மையினர் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல்களிலும் பிற நிகழ்வுகளிலும் இந்துத்துவ
அரசியல் சக்திகளின் பங்கு இருப்பதை நூலாசிரியர் விளக்கியுள்ளார். நாடு சுதந்திரம் பெற்ற நாளில் இந்து-முஸ்லிம் வன்முறையைத் தடுப்பதற்காக நவகாளியில் இருந்த காந்தியை மேற்கு வங்க கம்யூனிஸ்ட் இளம் தலைவர்கள் ஜோதிபாசு, பூபேஷ் குப்தா ஆகியோர் சந்தித்தது, தமிழ்நாட்டு கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தியின் திருமண வரவேற்புக்குப் பெரியார் தலைமை வகித்தது உள்ளிட்ட பல அரிய வரலாற்று நிகழ்வுகள் நூலில் பதிவாகியுள்ளன. மதச்சார்பின்மை, மதநல்லிணக்கம், கூட்டாட்சி உள்பட அரசமைப்பு முன்மொழிந்த விழுமியங்களை உயர்த்திப்பிடிப்போர், அவற்றை அழிக்க நினைக்கும் மதவாத சக்திகளை ஏன் எதிர்க்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதற்கான கையேடாக இந்த நூல் அமைந்துள்ளது. - ச.கோபாலகிருஷ்ணன்

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x