Published : 17 Sep 2022 07:30 AM
Last Updated : 17 Sep 2022 07:30 AM
நீதிக் கட்சியின் கொள்கைப் பிரகடனமாக நவம்பர் 20, 1916இல் பிட்டி தியாகராயர் கையெழுத்திட்டு வெளியிட்ட அறிக்கையில், பிற்படுத்தப்பட்டோருக்குத் தங்களது நியாயத்தை எடுத்துவைக்கப் பிரத்யேகமான பத்திரிகைகள் எதுவும் இல்லை என்ற கவலை வெளிப்பட்டிருந்தது. நீதிக் கட்சியின் சார்பில் ஆங்கிலத்தில் ‘ஜஸ்டிஸ்’, தமிழில் ‘திராவிடன்’, தெலுங்கில் ‘ஆந்திரப் பிரகாசினி’ ஆகிய பத்திரிகைகள் நடத்தப்பட்டிருந்தாலும் சுயமரியாதை இயக்கத்தின் சார்பாக வெளிவந்த ‘குடிஅரசு’ இதழே திராவிட இயக்கத்தின் கொள்கை முழக்கமாக இன்றும் வாசிக்கக் கிடைக்கிறது.
பெரியாரின் சொற்பொழிவுகள் சகல தரப்பினரையும் நோக்கிய விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் என்றால், அவர் நடத்திய பத்திரிகைகளும் அவற்றில் அவர் எழுதிய கட்டுரைகளும் மாற்றுக் கருத்துக் கொண்டோரிடம் நிகழ்த்தப்பட்ட விவாதங்கள். ‘குடிஅரசு’ தொடங்கி ‘பகுத்தறிவு’, ‘புரட்சி’, ‘விடுதலை’, ‘உண்மை’, ‘ரிவோல்ட்’, ‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’ என்று ஏறக்குறைய 50 ஆண்டுகள் இதழாளராகவும் இயங்கியவர் பெரியார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT