Published : 06 Aug 2022 07:05 AM
Last Updated : 06 Aug 2022 07:05 AM

ப்ரீமியம்
நூல்நோக்கு - மதுரா விஜயம்: சில கேள்விகள்

மதுரையைச் சுல்தான்கள் ஆட்சியிலிருந்து விடுவிக்க வந்த மாமணி என குமார கம்பணன் வர்ணிக்கப்படுவது உண்டு. விஜய நகரப் பேரரசின் இளவரசரான குமார கம்பணனின் வீரத்துக்கும் வெற்றிக்குமான ஆதாரம், அவரது மனைவியருள் ஒருவரான கங்கதேவி சமஸ் கிருதத்தில் எழுதிய குமார கம்பணனின் ‘மதுரா விஜயம்' நூல். ஆனால், இந்த நூலுக்கும் நிஜத்துக்கும் இடையில் இருக்கும் இடைவெளியை நூலாசிரியர் செ.திவான் விரித்துக் காட்டுகிறார்.

இந்துக்களுக்கு ஆட்சியை நிலைநாட்டுவதுதான் குறிக்கோள் என்றால், தொண்டை மண்டலத்தை ஆண்ட சம்புவரையரை வீழ்த்தியது எதனால் எனக் கேள்வி எழுப்புகிறார் திவான். மேலும், தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றி 8 ஆண்டுகள் கழித்துத்தான் குமார கம்பணன் மதுரையை முற்றுகையிடுகிறார் என்ற வரலாற்றுத் தகவல்களையும் சுட்டிக்காட்டுகிறார். மதுரா விஜயத்தைக் கல்வெட்டு ஆதாரங்கள் மூலம் கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறார் திவான். வரலாற்று ஆர்வலர்களுக்கு நல்ல விறுவிறுப்பு தரும் நூல் இது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x