Published : 02 Jul 2022 07:26 AM
Last Updated : 02 Jul 2022 07:26 AM
மனிதநேய மக்கள் கட்சியின் வழக்கறிஞர் பிரிவின் மாநிலச் செயலாளராக இயங்கிவரும் அகிலன் அப்ரார், 2004-ல் லண்டனில் வசிக்க நேர்ந்தபோது ஈழத் தமிழர்களுடன் பழகும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். ஈழத் தமிழர்கள் சிலர் ஐ.நா. மனித உரிமை அவையின் 41-ம் அமர்வில் பேசும் வாய்ப்பை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தனர்.
2009-ல் இலங்கையில் போர் முடிவுற்ற பிறகும் ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டுவரும் அநீதிகளுக்கு எதிராக அகிலன் அப்ரார் ஐ.நா.வில் உரையாற்றியுள்ளார். 2019-20-ல் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து இங்கு போராட்டங்கள் நடந்துகொண்டிருந்தபோது, இந்தியாவில் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர், பட்டியல் பிரிவினர் உள்ளிட்டோர்மீது நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைகள் குறித்து உரையாற்றுவதற்காக இரண்டாம் முறை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்துக்குச் சென்றிருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT