Last Updated : 11 Jun, 2022 08:00 AM

 

Published : 11 Jun 2022 08:00 AM
Last Updated : 11 Jun 2022 08:00 AM

ப்ரீமியம்
நூல் வெளி: உண்மையான கே.ஜி.எஃப் இதுதான்

கோலார் தங்க வயல் பற்றி, ‘கே.ஜி.எஃப்-1’,‘கே.ஜி.எஃப்-2’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. மாஃபியாக்களுக்கு இடையில் அமைந்த மோதல் மட்டுமே தங்க வயல் என்பதைப் போலப் படத்தின் கதை செல்கிறது. தொழிலாளர்களின் உழைப்புதான் அந்த தங்கச் சுரங்கத்தின் வளர்ச்சி என்னும் உண்மை இந்தப் படத்தில் மூடி மறைக்கப்பட்டுள்ளது.

ஆனால், தொழிலாளர்கள்தான், தொழிற்சங்கம் அமைத்து கோலார் தங்கச் சுரங்கத்தை வளர்த்தெடுத்தார்கள் என்ற வரலாற்றை வெளிப்படுத்தும் நூல்தான் எஸ்.இராமசாமி எழுதிய ‘தங்க வயல் தொழிற்சங்க வரலாறு’. நூலாசிரியர், இவரது தந்தை, இவரது பிள்ளைகள் என்று மூன்று தலைமுறையாகத் தங்கச் சுரங்கத்தில் பணியாற்றியிருக்கிறார்கள். சிறந்த தொழிற்சங்கத் தலைவரான எஸ்.இராமசாமி, தன் சொந்த அனுபவத்தை நூலாக எழுதியுள்ளார். இதில் மற்றொரு சோகமும் நிகழ்ந்துவிடுகிறது. நூலை எழுதி முடிக்கும் தருணத்தில், கரோனாவுக்கு இராமசாமி பலியானார். அவரது மகன் ஜோதிபாசு நூலைப் பதிப்பித்திருக்கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x