Published : 04 Jun 2022 08:22 AM
Last Updated : 04 Jun 2022 08:22 AM
தூயனின் முதல் தொகுப்பான ‘இருமுனை’ பரீட்சார்த்தமான சிறுகதைகள் அடங்கியது. 5 ஆண்டுகள் இடைவெளி விட்டு வெளியான ‘கதீட்ரல்’ என்ற நாவல், தொன்மத்தையும் நிகழ்காலத்தையும் ஃபான்டஸியின் கூறுகள் இணைத்து எழுதப்பட்டது. மூன்றாவதாக வெளிவரும் இந்த நூல், மூன்று சிறுகதைகளையும் மூன்று குறுநாவல்களையும் கொண்டது.
தலைப்புக் கதை, தெரிவதும் பின் மறைவதுமான ஒரு விளையாட்டு. அல்லது கதையில் சொல்வதுபோல் வாழ்க்கையில் தற்செயல்கள் எல்லாமே மேஜிக்தான். ஒரு பெரிய எலி மனதில் பயத்தையும் வீட்டில் தொந்தரவையும் தூக்கமின்மையையும் ஏற்படுத்தும் கதையில், பேராசிரியருடன் நியூட்டன், ஃப்ராய்டு, டார்வின் எல்லோரையும் இணைத்து, நனவிலி, கூட்டு நனவிலி போன்ற கருத்தாக்கங்களுடன் நீண்ட விவாதம் நடக்கிறது. எட்டு வயதுப் பெண் யோசனை சொல்கிறாள். அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்புடன் சற்றே மாயையின் சாயலும் கலந்து எழுதப்பட்ட கதை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT