Published : 30 Apr 2022 07:54 AM
Last Updated : 30 Apr 2022 07:54 AM

ப்ரீமியம்
360: பாரிஸ் உலகப் புத்தகத் திருவிழாவில் கெளரவிக்கப்பட்ட புதுச்சேரிப் பேராசிரியர்

ஒவ்வொரு ஆண்டும் இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பிரெஞ்சுப் படைப்புகளில் சிறந்த மொழிபெயர்ப்பைத் தேர்ந்தெடுத்து ‘ரொமெய்ன் ரோலந்த்’ பரிசை இந்தியாவில் அமைந்துள்ள பிரெஞ்சுத் தூதரகம் வழங்குகிறது. தஹர் பென் ஜெலூன் எழுதிய ‘லி மேரேஜ் டி பிளேஸிர்’ என்னும் நாவலை ‘உல்லாசத் திருமணம்’ என்னும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்ததற்காகப் பேராசிரியர் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகருக்கு 2021-ம் ஆண்டுக்கான ‘ரொமெய்ன் ரோலந்த்’ பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.

வெங்கட சுப்புராய நாயகர் புதுச்சேரியில் உள்ள காஞ்சி மாமுனிவர் அரசு பட்ட மேற்படிப்பு ஆய்வு மையத்தில் பிரெஞ்சுத் துறை தலைவராவார். இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைச் சிறப்பிக்கும் விதமாக 2022 பாரிஸ் உலகப் புத்தகத் திருவிழாவில், இந்தியா சிறப்பு விருந்தினர் நாடாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100 கலை, இலக்கிய ஆளுமைகள் ஏப்ரல் 21 அன்று பாரிஸில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவின் தொடக்க நிகழ்வில் பங்கேற்றனர். இவர்களில் வெங்கட சுப்புராய நாயகர், ‘உல்லாசத் திருமணம்’ நூலை வெளியிட்ட தடாகம் பதிப்பகத்தின் அமுதரசன் பொன்ராஜ், எழுத்தாளர் பெருமாள்முருகன், காலச்சுவடு கண்ணன் ஆகிய நால்வர் தமிழர்கள். வெங்கட சுப்பராய நாயகர் குறுந்தொகையை முழுமையாக பிரெஞ்சில் மொழிபெயர்த்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x