Published : 23 Apr 2022 08:00 AM
Last Updated : 23 Apr 2022 08:00 AM

ப்ரீமியம்
23.04.22 உலகப் புத்தக நாள் | நூல் வெளி: உலகெங்கும் விரியும் தமிழ்

இணையத்தின் வருகையால் தமிழ் இலக்கியம் இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் வாசிக்கப்படுகிறது. இரண்டாயிரத்துக்குப் பிறகான தமிழ் இலக்கியம், பன்முகத்தன்மை கொண்டது. தமிழகம் மட்டுமின்றி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நார்வே, இங்கிலாந்து, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பர்மா, ஹாங்காங், வியட்நாம், ஆப்பிரிக்கா, மொரீஷியஸ், பிரான்ஸ் என சர்வதேச அளவில் வாழும் தமிழர்கள் இன்றைய தமிழ் இலக்கியத்தை வளர்த்தெடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள்.

நோபல் பரிசு, புக்கர் விருது, டப்ளின் விருது எனப் புகழ்பெற்ற விருதுகளின் பட்டியலில் ஏன் தமிழ்ப் படைப்புகள் எதுவும் இடம்பெறுவதில்லை. முதற்காரணம், நாம் இன்றும் நமக்குள்ளாகவே பெருமை பேசிக்கொண்டிருக்கிறோம். சர்வதேச அளவில் அதைக் கொண்டுசெல்ல பெரிய முயற்சிகள் எடுக்கவில்லை. இன்றுவரை ஒரு தமிழ் நாவல்கூட இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட 23 ஆட்சி மொழிகள் யாவிலும் வெளியானதில்லை. ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பிறமொழிப் படைப்புகள் தமிழில் மொழியாக்கம் செய்யப்படுகின்றன. ஆனால், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கோ பிற மொழிகளுக்கோ செல்லும் படைப்புகளின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x