Published : 16 Apr 2022 07:51 AM
Last Updated : 16 Apr 2022 07:51 AM

ப்ரீமியம்
நூல் வெளி - டைகரிஸ்: முதல் உலகப் போரின் துயரங்கள்

ச.பாலமுருகன் தனது முதல் நாவலான ‘சோளகர் தொட்டி’யை (2004) வெளியிட்டு 17 ஆண்டுகள் கழித்து வெளியிட்டிருக்கும் நாவல் ‘டைகரிஸ்’. தமிழ் நாவல் வரலாற்றில் ‘சோளகர் தொட்டி’ உருவாக்கிய அதிர்வுகள் காரணமாக ‘டைகரிஸ்’ நாவலுக்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. சக மனிதர்கள்மீது வெவ்வேறு வடிவங்களில் நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்கள்தாம் ச.பாலமுருகனின் புனைவுக்களம். ஒவ்வொரு மீறலின் பின்னணியிலும் நிர்வாணப்படுத்தப்பட்ட அரசும் அதன் அதிகாரங்களுமே காரணமாக இருக்கின்றன என்பதை இவர் தொடர்ந்து எழுதிவருகிறார்.

1914 முதல் 1918 வரை நிகழ்ந்த முதல் உலகப் போரில் பிரித்தானிய ராணுவத்தில் பங்கெடுத்த இந்தியர்களின் மறைக்கப்பட்ட துயரம் தோய்ந்த வரலாறுதான் இந்நாவல். தமிழில் போர் சார்ந்த புனைவுகள் மிகக் குறைவு. எழுதப்பட்ட சிலதும் ஈழப்புலத்திலிருந்து உருவானவை. அவ்வகையில் ‘டைகரிஸ்’ முக்கியமான வரவு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x