Last Updated : 13 Feb, 2016 10:46 AM

 

Published : 13 Feb 2016 10:46 AM
Last Updated : 13 Feb 2016 10:46 AM

பெரியாரும் திருக்குறளும்

திருக்குறள் பற்றியும், வள்ளுவர் பற்றியும் பெரியார் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பு இந்த நூல். “திருக்குறள் ஒன்றுதான் பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எப்படிப்பட்ட அறிவாளியும் ஏற்கும் தன்மையுடன் அமைந்திருக்கிறது” என்று பெரியார் குறளைப் பற்றி பேசியிருக்கும் பகுத்தறிவு கருத்துகள் அனைத்தையும் இந்த நூல் விளக்குகிறது. ‘திருவள் ளுவரின் பெண்ணுரிமை’, ‘வள்ளு வரும் கற்பும்’, ‘புத்தரும் வள்ளு வரும்’, ‘வள்ளுவரை வாழ்த்து வதேன்?’ போன்ற சுவாரஸ்மான தலைப்புகளில் பெரியார் எழுதிய கட்டுரைகளும் இந்த நூலில் இடம்பெற்றிருக்கின்றன. அத்துடன், பெரியார் நடத்திய குறள் மாநாடுகள் பற்றிய பின்னணியையும் தெரிந்துகொள்ளமுடிகிறது. இந்தத் தொகுப்பில், பெரியார் கையாண்டிருக்கும் குறள்களும், அதற்கான விளக்கங்களும் இன்றைய தலைமுறைக்குப் பெரிதும் உதவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x