இப்போது படிப்பதும் எழுதுவதும் - கவிஞர் ஜீவி

இப்போது படிப்பதும் எழுதுவதும் - கவிஞர் ஜீவி
Updated on
1 min read

தமிழக முன்னாள் பொதுக்கல்வி இயக்குநரும், சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தருமான நெ,து.சுந்தரவடிவேலு எழுதிய ‘கல்வி வள்ளல் காமராசர்’ எனும் நூலை சமீபத்தில் படித்தேன். ஏழை வீட்டுப் பிள்ளைகளும் பசியாறிப் படித்திட, மதிய உணவுத் திட்டத்தை எவ்வளவு நெருக்கடிகள் வந்தபோதிலும் விடாது தொடர்ந்திட்ட காமராசரின் செயல் மிகுந்த நெகிழ்ச்சியளிப்பதாய் இருந்தது. நூலைப் படித்து முடித்ததும், அதிகம் படித்திராத காமராசர் எனும் தலைவருக்குள் கல்வி மீதிருந்த தீர்க்கமான பார்வையைப் புரிந்துகொண்ட மனநிறைவு உண்டானது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in