Last Updated : 28 Nov, 2020 10:38 AM

 

Published : 28 Nov 2020 10:38 AM
Last Updated : 28 Nov 2020 10:38 AM

சிற்றிதழ் அறிமுகம்: எல்லோரையும் உள்ளடக்கிய ஓர் இலக்கிய முயற்சி

தஞ்சை ப்ரகாஷின் நண்பர்களால் திருவாரூரிலிருந்து நடத்தப்படும் இடைநிலை இதழான 'பேசும் புதிய சக்தி’, ரசனை மரபு, நவீன எழுத்து முயற்சிகள், திறனாய்வுகள் என்று இலக்கியத்தின் எல்லாத் தரப்புகளுக்கும் இடமளித்துவருகிறது. தற்போது தீபாவளியை முன்னிட்டுக் கொண்டுவந்திருக்கும் இலக்கிய மலரும், சமகாலத் தமிழ் இலக்கியப் போக்கின் சகல பரிமாணங்களையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. நாஞ்சில் நாடன், பாவண்ணன், சி.எம்.முத்து, நா.விச்வநாதன், யுவன் சந்திரசேகர் உள்ளிட்ட முக்கிய எழுத்தாளர்களின் 20 சிறுகதைகளும் சுகுமாரன், கலாப்ரியா, சமயவேல் உள்ளிட்ட 31 கவிஞர்களின் கவிதைகளும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. இந்திரன், ரவிசுப்ரமணியன், க.பஞ்சாங்கம் முதலானோரின் 16 கட்டுரைகளும் தத்தம் பேசுபொருள் சார்ந்து முக்கியமானவை. சுனில் கிருஷ்ணனின் ‘எழுத்தாளர் காந்தியும் மகாத்மா காந்தியும்’ கட்டுரை காந்தியின் புத்தக எழுத்துகளைப் பற்றிய பகுப்பாய்வாக அமைந்துள்ளது. மு.மேத்தா, எம்.கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் விரிவான நேர்காணல்களும் இடம்பெற்றுள்ளன. பெருந்தொற்றுக் காலத்தின் துயரிலிருந்து தமிழ் இலக்கிய வாசகர்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற ‘பேசும் புதிய சக்தி’யின் விருப்பம் நிறைவேறட்டும்.

பேசும் புதிய சக்தி
தீபாவளி மலர்-2020
ஆசிரியர்: கவிதா ஜெயகாந்தன்
திருவாரூர்-610 001
விலை: ரூ.250
தொடர்புக்கு: 9489773671

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x