Published : 18 Jul 2020 08:01 AM
Last Updated : 18 Jul 2020 08:01 AM

நூலகங்களில் பத்திரிகைகள்: முதல்வரிடம் ஒரு கோரிக்கை

தமிழக நூலகங்களில் 6.5%-க்குள்தான் பத்திரிகைகளை வாங்க வேண்டும் என்ற விதி 40 ஆண்டுகள் பழையது. அந்தக் காலகட்டத்தில் பத்திரிகைகள் அளவும் விலையும் குறைவு. இன்று அப்படி இல்லை. எனவே, 40 ஆண்டுகளுக்கு முன்பான விதியை இன்றைக்கும் கொண்டிராமல், 6.5%-லிருந்து 20%-க்கு உயர்த்த வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளது தமிழ்நாடு பத்திரிகை வெளியீட்டாளர் சங்கம்.

ஒவ்வொரு மாவட்ட நூலக அலுவலகத்துக்கும் தேவையான நிதியைப் பொது நூலகத் துறை நிதியிலிருந்து உடனடியாக வழங்க வேண்டும் என்றும், அந்தப் பொது நிதியை பட்ஜெட்டில் அறிவித்து, ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்றும் அந்தக் கோரிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x