Published : 05 Jan 2020 11:04 AM
Last Updated : 05 Jan 2020 11:04 AM

சிற்றிதழ் அறிமுகம்: ‘காலச்சுவடு’ - 25-ம் ஆண்டில்

தனது இரண்டாவது பயணத்தை 1994-ல் தொடங்கிய ‘காலச்சுவடு’ இதழ், காலாண்டிதழாக வெளிவரத் தொடங்கி, இருமாத இதழாக மாறி, தற்போது மாத இதழாக வெளிவந்துகொண்டிருக்கிறது.

25-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருப்பதையொட்டி, ஜனவரி இதழ் 220 பக்கங்களில் சிறப்பிதழாக மலர்ந்திருக்கிறது. காந்தி 150-ஐ ஒட்டி சிறப்புக் கட்டுரைகள்; கு.ப.ராஜகோபாலன், மௌனி, எம்.வி.வெங்கட்ராம், தி.ஜானகிராமன், ப.சிங்காரம் ஆகியோரின் இதுவரை நூல்வடிவம் பெறாத சிறுகதைகள்; தமிழ் சம்ஸ்கிருத உறவு குறித்த சிறப்புக் கட்டுரைகள் ஆகியவை சிறப்பிதழை அலங்கரிக்கின்றன.

காலச்சுவடு
669, கே.பி.சாலை, நாகர்கோவில் - 629001.
விலை: ரூ.75
9677778863

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x