Published : 16 Nov 2019 07:23 AM
Last Updated : 16 Nov 2019 07:23 AM

நூல்நோக்கு: சிறுகதையாளர் க.நா.சு.

க.நா.சுப்ரமண்யத்தை விமர்சகராகவும் நாவலாசிரியராகவுமே பரவலாக அறிந்திருக்கிறோம். க.நா.சு.வின் சிறுகதை சாதனைகளை வாசிக்கத் தோதாக அவரது 24 சிறுகதைகளை ச.கந்தசாமி தொகுத்திருக்கிறார். க.நா.சு. ஒரு காலகட்டத்தில் இருந்த விழுமியங்களின் பிரதிநிதி.

அவர் தன் காலத்தின் குரலாக அவர் வாழ்ந்த சூழ்நிலையையே சிறுகதைகளாக எழுதியிருக்கிறார். ஆழ்மன வேட்கையை, அக்காலகட்டக் குடும்பநிலையை, இயல்பான வாழ்க்கையை அவரது சிறுகதைகளில் காணலாம்.

அவருடைய கதைகள் பெரும்பாலும் குடும்ப அமைப்பின் மீது நம்பிக்கை கொண்டு அதன் மீது கட்டப்பட்டவைதான். மனம் கொள்ளும் ஓட்டங்களை உளப்பகுப்பாய்வாளரின் இடைவெளியிலிருந்து பார்ப்பவை.

அதை எந்தப் பதைபதைப்புமின்றி மிக இயல்பாகச் சொல்லிச்செல்கிறார். மௌனத்தையும், சொல்லாமல் விடப்படும் தருணங்களையும், கற்பனையின் எல்லையற்ற சாத்தியங்களையும் க.நா.சு.வின் கதைகளில் காணலாம்.

சிறுகதைகள் மூலம் வாழ்க்கையின் சிறு பரப்பைக் காண முயல்வதாகக் கூறுகிறார் க.நா.சு.; அது உண்மையும்கூட.

- இரா.சசிகலாதேவி

க.நா.சுப்ரமண்யனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
ச.கந்தசாமி
சாகித்ய அகாடெமி
தேனாம்பேட்டை, சென்னை-18.
விலை: ரூ.200
044 24311741

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x