Published : 06 Oct 2019 11:50 AM
Last Updated : 06 Oct 2019 11:50 AM

காரைக்குடி, தூத்துக்குடியில் தொடங்கியது புத்தகக்காட்சி

காரைக்குடியிலும் தூத்துக்குடியிலும் புத்தகக்காட்சிகள் தொடங்கியிருக்கின்றன. அக்.13 (அடுத்த ஞாயிறு) வரை நடைபெறவுள்ள இந்தப் புத்தகக்காட்சியில் தமிழ்நாட்டின் முன்னணி பதிப்பகங்கள் பல பங்கேற்றிருப்பதுடன் முக்கியமான பதிப்பகங்களின் புத்தகங்களும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நாள்தோறும் மாலையில் எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஊடகவியலாளர்கள், அறிவுஜீவிகள் பங்கேற்கும் கலந்துரையாடல்கள், பட்டிமன்றங்கள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுசெய்யப்பட்டிருக்கிறது.

இந்து தமிழ் பங்கேற்பு: இரு புத்தகக்காட்சிகளிலுமே ‘இந்து தமிழ்’ நாளிதழின் ‘தமிழ் திசை’ பதிப்பகம் பங்கேற்றிருக்கிறது. நம்முடைய பதிப்பகத்தின் முக்கியமான புத்தகங்களோடு வாசகர்களின் பேராதரவு பெற்ற சமீபத்திய வெளியீடுகளான அண்ணாவின் வரலாற்றைப் பேசும் ‘மாபெரும் தமிழ்க் கனவு’, காந்தியின் வரலாற்றைப் பேசும் ‘என்றும் காந்தி’ இரு நூல்களும் இடம்பெற்றிருக்கின்றன. காரைக்குடியில் ‘தமிழ் திசை’ பதிப்பகத்தின் அரங்கு எண்: 25, தூத்துக்குடியில் அரங்கு எண்: 98.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x