Published : 27 Jul 2019 09:35 AM
Last Updated : 27 Jul 2019 09:35 AM

நூல்நோக்கு: பயணம் எனும் முடிவிலி

என் வானம் என் சிறகு
சாளை பஷீர் ஆரிஃப்
பரிசல் வெளியீடு
திருவல்லிக்கேணி, 
சென்னை-5.
விலை: ரூ.100
தொடர்புக்கு: 93828 53646

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும், அதன் நில அமைப்பும், அங்குள்ள பலதரப்பட்ட சமூகங்களும், அவர்களின் மொழி, பண்பாடு, உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை என எல்லாமே அதிசயங்களுக்கு உட்பட்டதுதான். இந்தப் பன்மைத்துவத்தைப் பயணங்களின் வெளிச்சத்தில் தரிசிக்க முற்படுகிறார் சாளை பஷீர். தாம்பரத்திலிருந்து புளியோதரை, எலுமிச்சை சாதப் பொட்டலங்களுடன் குவாஹாட்டியை நோக்கிப் பயணம் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து அசாம், ஷில்லாங் எனப் பயணம் விரிகிறது. வடகிழக்கு மாநிலங்களுக்கெல்லாம் பயணிக்கும் சாளை பஷீர், தனது பயண அனுபவத்தோடு கூடவே அங்குள்ள மக்களின் பண்பாடு, மாநில வரலாறு, சமகால அரசியல் போன்றவற்றையும் அறிந்துகொள்ள முற்படுகிறார். அதை சுவாரசியமான நடையில் கட்டுரையாக்கியிருக்கிறார்.
- ச.ச.சிவசங்கர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x