Published : 06 Jul 2019 09:23 AM
Last Updated : 06 Jul 2019 09:23 AM

360: நெய்வேலி புத்தகக்காட்சி

புத்தகங்களும் பீன்ஸ்களும்

பாலஸ்தீன அமெரிக்க நாவலாசிரியரான ஈடாஃப் ரம் (Etaf Rum) சமீபத்தில் தனது முதல் நாவலை வெளியிட்டிருக்கிறார்.

‘அ வுமன் இஸ் நோ மேன்’ எனும் அந்நாவலில் அகதிப் பின்புலத்தில் அவரும் அவரது பெற்றோரும் கடந்துவந்த பாதையை விவரித்திருக்கிறார். ரம் இந்த நாவலுக்கு முன்பே அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தால் கவனம் ஈர்த்தவர். அவரது ‘புக்ஸ் அண்ட் பீன்ஸ்’ (@booksandbeans) பக்கம் புத்தகங்களால் நிரம்பி வழிகிறது. தனக்கு மிகவும் பிடித்த புத்தகங்களை ஒவ்வொரு மாதமும் இந்தப் பக்கத்தில் பதிவுசெய்கிறார். புத்தக விரும்பிகளே... ரம்மைப் பின்தொடருங்கள்!

நெய்வேலி புத்தகக்காட்சி

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் நடத்தும் 22-வது புத்தகக்காட்சி கோலாகலமாகத் தொடங்கியது. நெய்வேலியிலுள்ள லிக்னைட் வளாகத்தில் நேற்று தொடங்கிய இந்தப் புத்தகத் திருவிழா ஜூலை 14 வரை நடக்கிறது. 10% தள்ளுபடி விலையில் புத்தக வேட்டையாடலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x