Published : 26 Aug 2017 10:34 AM
Last Updated : 26 Aug 2017 10:34 AM

நூல் நோக்கு: கவன ஈர்ப்பின் குரல்கள்

பொ

துத்தளத்தில் பெரிய அளவில் கவனிப்பைப் பெறாத 9 பெண் ஆளுமைகளின் நேர்காணல் தொகுப்பு இது. கவிஞராக, சிறுகதை எழுத்தாளராக அறியப்பட்ட தேன்மொழி, இந்தத் தொகுப்பின் வழியே நல்ல உரையாடலாளராகவும் அறியப்படுகிறார். குழந்தைப் பருவம் முதற்கொண்டே தீண்டாமைக் கொடுமைகளை நேரில் கண்டு அனுபவித்த கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், அமெரிக்காவின் ஹூஸ்டனில் வசிக்கும் சமூகச் செயல்பாட்டாளரும் நாவலாசிரியருமான ஸெஹ்பா ஸர்வார், பதிப்புத் துறையில் தனிமுத்திரை பதித்துவரும் சூசன் ஹாரீஸ், இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் அகில இந்திய பொதுச்செயலாளரான ஆனி ராஜா உள்ளிட்ட 9 பெண் சிந்தனையாளர்களின் மனந்திறந்த உரையாடல்கள் நூலில் இடம்பெற்றுள்ளன.

‘நான் ஆண்களை வெறுக்கவில்லை; விமர்சிப்பது ஆணாதிக்க மனோபாவத்தைத்தான்’ என்று பாகிஸ்தானிய எழுத்தாளர் சோனியா கமால் சொல்லியிருப்பதும், ‘போராட்ட இயக்கங்களில் பெண்கள் தங்கள் இச்சைப்படி இயங்கவோ செயற்படவோ முடியவில்லை’ என்று எதார்த்தத்தைப் பேசும் இலங்கையின் முக்கிய பெண்ணியவாதியான செல்வி திருச்சந்திரனின் குரலும் கவனத்திற்குரியவை.

- மு.முருகேஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x